Home உலகம் பிரித்தானியாவில் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பலி

பிரித்தானியாவில் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பலி

by admin


பிரித்தானியாவில் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனா வைரஸ் காரணமாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது

ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரித்தானியாவும் அதிகமான உயிர்ப்பலி கொடுத்துள்ள நிலையில் முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய ஒற்றுமை காணப்படுகின்றது

இந்த 4 நாடுகளிலுமே இதுபோன்ற முதியோர் இல்லங்களில் வசித்த சுமார் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான முதியவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், போதிய கவனிப்பும் இன்றியும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியாவில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயதானவர்கள் நிலையும் கொரோனா தாக்குதலுக்குப் பின், மிக மோசமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆங்கு சிறியதும், பெரியதுமாக சுமார் 2 ஆயிரம் முதியோர் இல்லங்கள் உள்ளன. அவற்றில் 70-க்கும் மேற்பட்ட இல்லங்களில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 521 முதியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பீட்டில்பரோ என்ற நகரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்களது இறுதி காலத்தை கழித்து வந்த 140 முதியவர்களில் 24 பேர் கடந்த 10 நாட்களில் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் 6 பேர் பலியானதும் இதில் அடங்கும். (இன்னும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்) அதாவது, இந்த இல்லத்தில் சராசரியாக 6 பேருக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்த போதிலும் அந்நாட்டின் ‘அல்சைமர்ஸ் சொசைட்டி’ இந்த எண்ணிக்கை 2,500 ஆக இருக்க வாய்ப்புள்ளது, எனத் தெரிவித்துள்ளது

அதேநேரம், அரசாங்கம் வெளியிடும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் பட்டியலில் முதியோர் இல்லங்களில் உயிரிழந்தவர்கள் சேர்க்கப்படுவதே இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

மேலும் ரோனா வையிட் என்ற பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ‘முதியோர் இல்லங்களில் யாருமே சரியாக கவனிப்பதில்லை. வயதானவர்கள்தானே, செத்தால் சாகட்டும் என்று நினைக்கிறார்கள். எனது 86 வயது தாயாரும் இல்லத்தின் நிர்வாகிகளின் அலட்சியத்தால்தான் உயிரை இழந்தார். இது மிகப்பெரிய கிரிமினல் குற்றம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பெரும்பாலான முதியோர் இல்லங்களில் முறையான பரிசோதனை நடத்துவதற்கு முன்பாகவே அதிகமானோhர் கொரோனா தாக்கி பலியாகிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளதையடுத்து, முதியோர் இல்லங்களில் கொரோனா பரிசோதனையை பிரித்தானியா அரசு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #பிரித்தானியா #முதியோர்இல்லங்கள் #கொரோனா #முதியவர்கள்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More