வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது மொத்த 59 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்த தொற்றாளர்களை தேடி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கடற்படை சிப்பாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடற்படை தளபதியின் உத்தரவின் பேரில் வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். #வெலிசர #கடற்படைமுகாம் #சவேந்திரசில்வா
Spread the love
Add Comment