Home இலங்கை பாடசாலைகளை உடைத்து பொருள்களைத் திருடியவர்களுக்கு விளக்கமறியல்

பாடசாலைகளை உடைத்து பொருள்களைத் திருடியவர்களுக்கு விளக்கமறியல்

by admin

வட்டுக்கோட்டை காவல்துறைபிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரை வரும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டன.

வட்டுக்கோட்டை  காவல்துறைபிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை கார்த்திகேசு வித்தியாலயம், தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாசாலை, பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தியாலயம் மற்றும் சுப்ரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதிதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

4 பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து மடிகணினி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டிருந்தன. அதுதொடர்பில் பாடசாலை அதிபர்களால் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை காவல்துறையினர், திருடப்பட்ட பொருள்களுடன் 3 பேரைக் கைது செய்தனர்.   #வட்டுக்கோட்டை  #பாடசாலைகளை  #விளக்கமறியல்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More