Home இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைநகல் இலக்கம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைநகல் இலக்கம்

by admin
பாறுக் ஷிஹான்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடப்பட்டிருந்தது.

அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் லத்தீப்  தெரிவித்திருந்த நிலையில்  மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புகின்றவர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட  தொலை நகல் மூலம் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில்  அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யுமாறும் கடந்த தினங்களில்  அரசு அறிவித்திருந்தது.

இதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகமும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டு பின்னர் பகுதி அளவில் இயங்க தொடங்கியது.இருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் மேலும்  பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கை இலகுபடுத்துவதற்காக புதிய தொலைநகல் 0672229728 எனும்  இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளதாக    அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.அத்துட்ன் ஊரடங்கு சட்டம் பேணப்பட்டுள்ள நிலையில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை மீறியதாக எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. #மனிதஉரிமைகள்ஆணைக்குழு  #முறைப்பாடு  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More