Home இந்தியா கொரோனா – இந்தியாவில் 1218 பேர் உயிரிழப்பு – பாதிப்பு கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது

கொரோனா – இந்தியாவில் 1218 பேர் உயிரிழப்பு – பாதிப்பு கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது

by admin


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளதுள்ள நிலையில் 1218 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37336 பேர் எனவும உயிரிழந்தோர் எண்ணிக்கை 1218 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்துடன் 9951 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 11505 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 485 பலியாகி உள்ளனர். குஜராத்தில் 4721 பேருக்கும், டெல்லியில் 3738 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2719 பேருக்கும், ராஜஸ்தானில் 2666 பேருக்கும், தமிழகத்தில் 2526 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. #கொரோனா  #இந்தியா  #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More