Home உலகம் மெக்சிகோவில் குடும்பவன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை

மெக்சிகோவில் குடும்பவன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை

by admin

மெக்சிகோவில் கொரோனா பரவிய கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் 1,000 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருந்;தது. மார்ச் 2-வது வாரத்தின் பின்னர் அங்கு கொரோனா வீரியமாக தாக்கத் தொடங்கியதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இதுவரை அங்கு கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஊரடங்கு வருகிற 30-ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாததால் 24 மணி நேரமும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இது, பல்வேறு வழிகளில் குடும்ப வன்முறையை அதிகரிக்க செய்துள்ளது.

கணவன் மனைவி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் தினமும் சண்டை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோதல்களால் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 1,000 பெண்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது கடந்த பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் மெக்சிகோவில் 988 குடும்பத் தலைவிகள், இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும், கொலைக்குற்றங்களும் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க ஜனாதிபதி  தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மெக்சிகோ நாட்டின் மகளிர் அமைப்புகள், சமூக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதனை மறுத்துள்ள மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடார் ‘பெண்களுக்கெதிரான குற்றங்கள் எப்போதும் போல நடந்தவாறுதான் உள்ளது. ஊரடங்கு காலத்தில்தான் பெண்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதாக கூறுவது தவறு. அரசியல் எதிரிகள் எனது செல்வாக்கை சீர்குலைக்கும் விதமாக மகளிர் அமைப்புகளை தூண்டிவிடுகின்றன’ என குற்றம் சுமத்தியுள்ளார். #மெக்சிகோ #குடும்பவன்முறை #பெண்கள் #படுகொலை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More