Home இலங்கை பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை….

பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை….

by admin

நாடுமுழுவதும் அபாயகரமான கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவில் பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. யாழ்ப்பாணம் காவற்துறையினர்  தாக்கல் செய்த மனு மீதே இந்தக் கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மனுவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்று அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள மக்களை ஒன்று திரட்டும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் என்று மேல் குறிப்பிட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More