Home இலங்கை வடமராட்சி சம்பவம் ஒருவர் கைது

வடமராட்சி சம்பவம் ஒருவர் கைது

by admin

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.    துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்தெ 27 வயதுடையவரே விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.    வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் கடந்த 27ஆம் திகதி குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் காவல்துறையினர்சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன் , குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் அன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்திறங்கிய போது நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே  காவல்துறையினர் இருவர் காயமடைந்தனர்.

சட்டவிரோத மண் அகழ்வோர்காவல்துறையினரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

இந்நிலையிலையே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  #வடமராட்சி  #வெடிப்பு ,#கைது #துன்னாலை  #மண்அகழ்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More