Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற பொய்ச்செய்திக்கு பின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இருவர்   :

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற பொய்ச்செய்திக்கு பின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இருவர்   :

by admin

இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், “மனோ கணேசன்சஜித்தை விட்டு விலகி செல்கிறார்” என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது.

இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என அங்கிருந்து இங்கேஇங்கிருந்து அங்கே” பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும் செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும்எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீதுநம்பிக்கை வைத்துநான் பயணிக்கிறேன். என்னுடன்எனது கட்சியும்எமது கூட்டணியும் உறுதியாக பயணிக்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடுஅரச கரும மொழிகள்சமூக மேம்பாடுஇந்து சமய விவகார அமைச்சரும்கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,  

புதிய தேசிய கூட்டணியில் சேரும் போது அல்லது விலகும்போதுகூட, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என ஒரேயொரு விடயத்தை மாத்திரம் காரணமாக வைத்துகொண்டுநான் சேருவதும் இல்லை. பிரிவதும் இல்லை. நாம் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். வேகம் இருப்பது போல் எமக்குள் விவேகமும் இருக்கிறது.  

நான் நாளுக்கு ஒரு அணி மாறிக்கொண்டு இருந்தால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும்இந்நாட்டின் இந்த பிரதேசத்தில் எனக்கு மரியாதை இருக்காது. அதனால், நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதை இருக்காது. தேர்தலை எதிர்நோக்கும் இவ்வேளையில், இவர்கள் இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப முயல்கின்றனர்.  

இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும்எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டுஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவராக இருக்கும் போதுஅவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.

இன்று எங்கள் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால்நாங்கள் ஒரு கட்சியாககூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து அதில் அங்கம் வகிக்கிறோம். அதன் தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் பதவி வகிக்கின்றார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

இன்று இந்நாட்டில் ஆளும் பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பார்த்து பயப்படும் அணியாக எமது ஐக்கிய மக்கள் சக்தி நிலவுகிறது. அதனாலேயே நாள்தோறும் அவதூறுகளை இந்த இரண்டு கட்சியினரும் எம்மீது எடுத்து வீசுகிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த வேளையில், கடந்த கொழும்பு மாநகரசபை தேர்தலின் போது கூட இதே இணையதளம் என் மீது களங்கம் கற்பித்து அபாண்ட பொய் செய்திகளை எழுதியது.  

நாமே உருவாக்கியுள்ளபுதிய தேசிய வெற்றிக்கூட்டணியின்  ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து விலகும் தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் தேர்தலில், நாம் வெற்றி வாகை சூடுவோம். #ஐக்கியமக்கள்சக்தி  #பொய் #அமைச்சர்கள்  #மனோகணேசன்  #சஜித்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More