Home இலங்கை வல்லிபுர ஆழ்வாருக்கு செல்ல கட்டுப்பாடுகள் இறுக்கம்

வல்லிபுர ஆழ்வாருக்கு செல்ல கட்டுப்பாடுகள் இறுக்கம்

by admin
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

 பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை. சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்களே வழிபாடுகளில் ஈடுபட முடியும். அந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கூடுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்று முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட 50 அடியவர்கள் என்ற அனுமதியை மீறி பல நூற்றுக் கணக்கானோர் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

அத்தோடு ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு பலர் அறிவுறுத்தல் வழங்கியும் சுவாமியை சுமந்துள்ளார். எனவே அவ்வாறு அவருடன் இணைந்து சுவாமியை சுமந்து சென்ற 14 பேரை 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் சில இணைய ஊடகங்கள் ஆலயத்திரு “சீல்” வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. #வல்லிபுரஆழ்வார் #கட்டுப்பாடுகள் #காய்ச்சல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More