Home இலங்கை ஊடக நிறுவனங்களிடம் நடுநிலையாக செயற்படுமாறு கோரிக்கை

ஊடக நிறுவனங்களிடம் நடுநிலையாக செயற்படுமாறு கோரிக்கை

by admin


நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற வடமாகாண தேர்தல் அரச அதிகாரிகளுடனான கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து அவர் சுவரொட்டிகள், பதாதைகள், புகைப்படங்கள் என்பவற்றை காட்சிப்படுத்த 1981 இலக்கம் 1 பாராளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் எனினும், வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகங்களில் கட்சியின் பெயர், சின்னம், இலக்கம் என்பவற்றை காட்சிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் பகுதியில் மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும் எனவும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற போதிலும் செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது  நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு எதிர்பார்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #ஊடகநிறுவனங்கள் #நடுநிலை  #கோரிக்கை  #மகிந்ததேசப்பிரிய

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More