Home இலங்கை கருணாவிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கருணாவிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

by admin


கருணா அம்மான் என அழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பதில் காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் எனவும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது இராணுவத்தினரில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை தான் கொலை செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்ததனைத் தொடர்ந்து பதில் காவல்துறைமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. #கருணா #விசாரணை #ஆனையிறவு  #விடுதலைப்புலிகள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More