Home உலகம் பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல்- 5பேர் பலி

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல்- 5பேர் பலி

by admin


பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கம்போல் இன்று அலுவலகம் இயங்கிக்கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த தீவிரவாதிகள் பிரதான வாயிலில் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியவாறு துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்துள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் இந்த மோதலில் 3 தீவிரவாதிகளும் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தீவிரவாதிகள் பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து பதுங்கிக் கொண்டதாகவும் இதையடுத்து அலுவலக பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அப்பகுதி முழுவதையும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, குறித்த தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #பாகிஸ்தான் #பங்குச்சந்தை #தாக்குதல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More