Home இலங்கை பேசாலையில்  தேவாலயம் ஒன்றிற்கு  இனம் தெரியாத நபர் வருகை

பேசாலையில்  தேவாலயம் ஒன்றிற்கு  இனம் தெரியாத நபர் வருகை

by admin

மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை வந்து சென்ற விடயம் தொடர்பாக  புலனாய்வு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சந்தேக நபர் நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சென்றுள்ளார். குறித்த நபர் ஆலயத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை ஆலயத்தினுல் இருந்த பெண் ஒருவர் அவதானித்துள்ளார். குறித்த சந்தேக நபரிடம் குறித்த பெண் வினவிய போதும் அவருடைய பதில் குறித்த பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உதவி பங்குத்தந்தை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை கொடுதோர் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி யளவில் பேசாலை பங்குத்தந்தை பேசாலை காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பேசாலை  காவல்துறையினர் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சீ.சீ.ரீவி காணொலியை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உற்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . #பேசாலை  #தேவாலயம் #இனம்தெரியாத  #புலனாய்வுபிரிவினர்
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More