Home இலங்கை கடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

கடல் எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

by admin

வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வருபவர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விசேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக இந்தியாவிலிருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் இந்த நிலமையை கட்டுப்படுத்த கடற்படையினர் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் அதனை தொடர்ந்தும் அதிகரிப்பதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். #கடல்எல்லை  #பாதுகாப்பு  #கடற்படையினர் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More