Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை கோப்புகள் மீண்டும் திருப்பியனுப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை கோப்புகள் மீண்டும் திருப்பியனுப்பட்டுள்ளது

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய, மேலும் 38 முழுமைப்படுத்தப்படாத விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களம் மீண்டும் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமைப்படுத்தப்படாத 40 விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #உயிர்த்தஞாயிறு  #தாக்குதல்  #விசாரணைகோப்புகள் #சட்டமாஅதிபர்திணைக்களம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More