Home இலங்கை வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

by admin


பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் மிதந்து கொண்டிருந்த இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்தசடலங்கள் தொடர்பில் பெல்மடுல்ல நீதவானினால் பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், பெல்மடுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் கழுத்தப் பகுதியில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும் மற்றைய சடலத்தின் தலைப்பகுதியில் காயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த சடலங்கள் யாருடையவை என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். #வெட்டுக்காயங்கள்   #சடலங்கள் #மீட்பு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More