Home உலகம் நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

by admin

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் பெய்த கனமழையால் மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன 19-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருவதால் அந்நாட்டில் ஓடும் முக்கிய நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்ற நிலையில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #நேபாளம்  #நிலச்சரிவு  #கனமழை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More