Home உலகம் பிரித்தானியாவில் விரைவில் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்படலாம்

பிரித்தானியாவில் விரைவில் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்படலாம்

by admin


பிரித்தானியாவில் விரைவில் அலுவலகங்கள் மற்றும் பிற பணியிடங்கள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவதனை பரிந்துரைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் இவ்வாறு பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் குளிர்காலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில் இதுகுறித்து முக்கிய முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூடுதல் செலவினங்களை சமாளிப்பதற்கு சில வரி உயர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.  #பிரித்தானியா #பொதுஇடங்களில்  #முகக்கவசம்  #கொரோனா  #இரண்டாவதுஅலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More