Home உலகம் இத்தாலியில் அவசரகாலநிலை நீடிப்பு

இத்தாலியில் அவசரகாலநிலை நீடிப்பு

by admin

கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதன் முதலில்  அமுல்படுத்திய இத்தாலி    நாட்டில் தேசிய அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இத்தாலி கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு 2 மாதங்களாக அமுலில் இருந்த ஊரடங்கு கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போதும்  எ தேசிய அவசர நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இத்தாலியில் நாளை (வெள்ளிக்கிழமை) அவசரநிலை முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை ஒக்டோபர் மாதம் 15-ந்  திகதிவரை நீட்டித்து பிரதமர் கியூசெப் கோண்டே உத்தரவிட்டுள்ளாா்.

தொற்று நோயின் வீரியம் மற்றும் தேசிய சுகாதார சேவையில் அதன் தாக்கம் கணிசமாக குறைந்து விட்டாலும், வைரஸ் நம் நாட்டில் தொடர்ந்து பரவுகிறது என்று தரவுகள் கூறுகின்றன. எனவே தேசிய அவசர நிலையை நீட்டிப்பது அவசியமாகிறது. இது குறிப்பிட்ட பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதற்கான தேவைகளையும் உள்ளடக்கியதாகும் என பிரதமா் தொிவித்துள்ளாா்.  #இத்தாலி #அவசரகாலச்சட்டம் #கொரோனா #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More