Home இலங்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்  பதவிவிலகியுள்ளாா்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்  பதவிவிலகியுள்ளாா்

by admin

கலாநிதி தீபிகா உடகம இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்   பதவியிலிருந்து விலகுவதாக  கடிதத்தினை  கையளித்துள்ளாா் .அவா் தனது பதவிவிலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு   அனுப்பியுள்ளதுடன் அதன் பிரதியே அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ளாாா்.

அரசியலமைப்புப் பேரவை    நேற்று பிற்பகல் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய போது கலாநிதி தீபிகா உடகமவின்  பதவிவிலகல் கடிதம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்  மனித உரிமை ஆணைக்குழுவில் அவர் ஆற்றிய சேவை தொடர்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #மனிதஉரிமைகள்ஆணைக்குழு  #தலைவர்  #தீபிகாஉடகம  #பதவிவிலகல்

 .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More