Home இலங்கை “இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…

“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…

by admin


இராஜினாமா செய்யுமாறு தனக்கு  எவரும் அழுத்தம் தரவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

2020 நாடாளுமன்ற  பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக சதி இடம்பெற்றுள்ளதாகவும் கருத்து மோதல்கள் இடம்பெறுவதுடன் அதற்கு எதிராக போராட்டங்களும், சமூக வலைத்தள மோதல்களும் தொடருகின்றன.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள  சசிகலா ரவிராஜ்  “கட்சியின் தலைமைகளுடன் இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். எனவே, இவ்விடயத்தில் அவர்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். அத்துடன் ஆதரவாளர்களின் எண்ணங்களில்தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது. இவ்வாறு, ஆதரவாளர்களும் என்மீது முழுமையான நம்பிக்கையில் இருந்தனர். இருந்தபோதும் தேர்தல் முடிவுகளில் நான் பின்தங்கியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முடிவை நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இதேவேளை, மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில், பாதுகாப்பு படையினர் இறக்கப்பட்டமை குறித்தே சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேன். மாறாக வெளியான பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. மேலும், எனக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More