Home இலங்கை மகிந்த ராஜபக்ஸ   பிரதமராக பதவியேற்பு…

மகிந்த ராஜபக்ஸ   பிரதமராக பதவியேற்பு…

by admin

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்  மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஸ   முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) முற்பகல் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த களனி ரஜமகா விகாரை புனித பூமியில் இடம்பெற்றது.

நான்காவது தடவையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ 2005 முதல் 2015 வரை இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

  ஐம்பது வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட மகிந்த ராஜபக்ஸ  1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானாா்.   1995ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சராக குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளை நிறைவேற்றினார்.

2004 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதன் முறையாக பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், 2018 ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இரண்டாவது முறையாகவும், 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.

 குருணாகல் மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  மகிந்த ராஜபக்ஸ  527,364 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது பொதுத் தேர்தலொன்றில் அபேட்சகர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்புவாக்குகள் என வரலாற்றில் பதிவானது.

மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமர் அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர். பதவிப் பிரமாண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதியும்  பிரதமரும் விகாரைக்கு சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.

மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், தூதுவர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள, புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். #மகிந்தராஜபக்ஸ   #பிரதமராக  #பதவியேற்பு #ஸ்ரீலங்காபொதுஜனமுன்னணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More