Home இலங்கை இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலி

by admin

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றல் காரணமாக 1,007 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக நாளாந்தம் 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 60 ஆயித்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளதுடன் 55,573 குணமடைந்துள்ளனா். அந்தவகையில் இதுவரை 17,51,555 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் 2-வது முறையாக இன்று பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்ததனையடுத்து இதுவரை மொத்தம் 48,040 பேர் உயிாிழந்துள்ளனா்.

இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது. #இந்தியா #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More