இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகேளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போது கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #அரச #போக்குவரத்து #முகாமையாளர் #கைது #இலஞ்சம்