Home உலகம் லிபிய கடல் எல்லையில் கப்பல் மூழ்கியதில் ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் பலி

லிபிய கடல் எல்லையில் கப்பல் மூழ்கியதில் ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் பலி

by admin

லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக ஐநா அகதிகள் உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் இயந்திரம் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானதாகவும் குறித்த கப்பலில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் 37 பேர் உள்ளூர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ள அந்த அமைப்பு இந்த ஆண்டு இடம்பெற்ற மிகவும் மோசமான கப்பல் விபத்து இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அதேவேளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என ஐநா அகதிகள் உயர் ஆணையகம் மற்றும் ஐநாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் எனவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு லிபியாவில் இருந்து கடல் மூலமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

2011ஆம் ஆண்டு லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாபி ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய நாடாக லிபியா உள்ளமை குறிப்பிடத்தக்கது #லிபியா #கடல்எல்லை #கப்பல் #குழந்தைகள் #குடியேறிகள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More