Home இந்தியா இருண்ட காலத்தில் ஒரு ஒளி விளக்கு நீதிபதி நௌவாடே !

இருண்ட காலத்தில் ஒரு ஒளி விளக்கு நீதிபதி நௌவாடே !

by admin


கொரொனாவுக்கு தப்லீக் ஜமாத்தும் முஸ்லீம்களுமே காரணம். இக்கருத்து இந்துத்துவ சக்திகளால் தொடர்ந்து பரப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகளே இக்கருத்தை அன்றாடம் பரப்பி வந்ததற்கு ஆதாரம் உள்ளது. அதையொட்டி டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழகத்தில் மசூதிகளில் தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.


இதோ மும்பை உயர்நீதிமன்றம் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. வழக்கை ரத்து செய்துள்ளது மட்டுமல்ல இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளவாடே இந்தியாவின் அழகிய மதச்சார்பின்மையின் குரலாக ஒலித்திருக்கிறார்.
அந்தக் குரல் இந்த இருண்ட காலத்தில் ஒரு விளக்கை எரிய விடுகிறது.


டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 29 பேர் மீதான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நௌவாடே,“ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன”


“தப்லிக் ஜமாத் என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். ஒவ்வொரு மதமும் காலப் போக்கில் மாற்றத்தை சந்திக்கிறது. உலகம் மாறிக்கொண்டே வர, மாற்றங்களை யாரும் தவிர்க்க முடியாது. சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.

அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்”


”நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்”


”தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது. இதற்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இல்லையா?


நன்றி- பிபிசி தமிழ் – Arul Ezhilan (FB)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More