யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மிக எளிமையாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். #யாழ்பல்கலைக்கழக #துணைவேந்தர் #சிறிசற்குணராஜா #பதவியேற்பு
1 comment
congratulations.
Comments are closed.