Home இலங்கை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் உயிரிழப்பு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் உயிரிழப்பு

by admin

க.கிஷாந்தன்)

நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்றுஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

கடந்த 01.09.2020 அன்று டுபாய் நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்திருந்தார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தந்த நிலையிலேயே நாடு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில்நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு சுகவீனம் ஏற்படவே கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே நேற்று மாலை  உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன். இவருடைய உயிரிழப்பிற்கு காரணம் இவருடைய உடலில் வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் தாக்கம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடலை இன்று (07.09.2020) காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #நுவரெலியா #தனிமைப்படுத்தல் #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More