Home உலகம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பாிசோதனை நிறுத்தம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு மருந்து பாிசோதனை நிறுத்தம்

by admin

பிாித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் மேற்கொண்டு வந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பலநாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் பாிசோதனை செய்து வந்த   AZD1222- என்ற தடுப்பூசிதான் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாக கருதப்பட்டது.

உலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா  செனகாவும் ஒன்றாகவிருந்த நிலையில் பாிசோதனைக்குள்ளான தன்னார்வலருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது. 

எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ஒக்ஸ்போர்ட் #கொரோனா #தடுப்புமருந்து #நிறுத்தம் #ஆஸ்ட்ராசெனகா #தன்னார்வலர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More