Home இலங்கை கல்முனையில் இருந்து இடமாற்றப்பட்ட கப்பல் மாலுமி எல்மோ

கல்முனையில் இருந்து இடமாற்றப்பட்ட கப்பல் மாலுமி எல்மோ

by admin

வைத்தியர்கள் தாதிகள்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் என கடந்த ஆறுநாட்களாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சங்குமண்கண்டிக்கடலில் எரிந்துகொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க  பனாமாக்கப்பல் மாலுமி பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோர்   தெரிவித்தார். 


 கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (4) மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3மணிநேரசத்திரசிகிச்சை சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 


இந்நிலையில் கடந்த புதன்கிழமை(9)  இரவு  கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் கப்பல்தீவிபத்து பற்றிய அனுபவத்தைக்கேட்டபோது
‘எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப்பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன். 


அங்கு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். சுமார் 15நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களைமுடித்துவிட்டு குளித்தேன். 
குளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத்தாக்குவதுபோன்று உணர்ந்தேன். 
கப்பலில் ஒருபகுதி எரிவதைக்கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை.


இருந்தும் இன்னும் நான் உயிர்வாழ்கிறேன். 
உண்மையில் இலங்கை மக்கள் இலங்கை கடற்படைவிமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை டாக்டர்கள் நர்சுகள் ஏனையோர் என்னைப் பராமரித்தவிதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றிகள் என்றார். #கல்முனை #மாலுமி #பிலிப்பைன்ஸ் #நன்றி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More