தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்வது உட்பட மூன்று விடயங்களுக்கு குறித்த அதிகார சபைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பில் நாளை கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MTNEWDIAMOND #கடல்வாழ்உயிரினங்களுக்கு #அச்சுறுத்தல் #தீவிபத்து #அதிகாரசபை