Home இலங்கை வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் கைது!

வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் கைது!

by admin

வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இருவர் பளை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி ஓரத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது காவற்துறையினரர் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் பையொன்றிலிருந்து வெடிபொருட்கள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெடிபொருட்களை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 மற்றும் 23 வயதுடைய கிளாலி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More