Home இலங்கை மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு – வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு – வான்கதவுகள் திறப்பு

by admin

(க.கிஷாந்தன்)

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 18.09.2020 அன்று இரவு முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது. #மேல்கொத்மலைநீர்தேக்கம் #நீர்மட்டம் #உயர்வு #வான்கதவுகள் #அடைமழை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More