Home இலங்கை இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது

by admin

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று புதன் கிழமை(23) இரவு மடு காவல்துறையினா் கைப்பற்றியுள்ளதுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.


சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 103 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.


மடு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மடு காவல் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஸ  தலைமையிலான காவல்துறைக் குழுவினர் குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.


மேலும் குறித்த கூலர் வாகனத்தில் கஞ்சா பொதிகளுடன் சென்ற   எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் வாகனம் மடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் பின்னர் அவற்றினை மன்னார் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #குஞ்சுக்குளம் #இராணுவ #சோதனைச்சாவடி #கேரளகஞ்சா #கைது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More