Home இலங்கை கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்

by admin

கல்முனை 2   கடற்கரை பிரதேசத்தில்   கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை காவல்துறையினா் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.எனினும் உடனடியாக இனங்காண  காவல்துறையினா் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.இதனால் பொதுமக்களின் உதவியை  நாடி சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

அதன் பின்னர்  அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மகள் அடையாளம் காட்டியிருந்தார்.

இதனடிப்படையில்  கல்முனை 02 அன்னை வேளாங்கண்ணி வீதி சேர்ந்து  2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க  சின்னத்தம்பி நேசம்மா என   அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் கடற்படையினரும் காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். #கல்முனை #சடலமாக #அடையாளம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More