Home இலங்கை எருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது:

எருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது:

by admin

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை காவல்துறையினரால் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


மன்னார் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில்  கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த மஞ்சள் கட்டி மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பில் மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களதிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. #கடல்மார்க்கமாக #மஞ்சள் #எருக்கலம்பிட்டி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More