Home உலகம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம்

by admin

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுவதாக எஅமொிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் தினதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா   தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால் ட்ரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியிருந்தாா்.

இந்நிலையில் தனது உடல் நலம் பற்றி வீடியோ வெளியிட்டுள்ள டிரம்ப் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் எனவும் அது கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது எனவும் தொிவித்துள்ளாா்.

கொரோனா தனக்கு கடவுள் செய்த மறைமுக ஆசீர்வாதம் எனவும் தனக்குக் கிடைத்த சிகிச்சை இலவசமாக உங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வேன் எனத் தொிவித்துள்ளாா்

அத்துடன் கொரோனாவை உருவாக்கி உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் டினவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்

வெள்ளை மாளிகை ட்ரம்ப்  காய்ச்சல் இல்லாமலும் நோய் அறிகுறி இல்லாமலும் இருந்து வருகிறார் என்று தெரிவித்தாலும் அவர் கொரோனாவிலிருந்து முழுவதும் விடுபட்டாரா என்பது பற்றி உண்மையான நிலவரம் தெரியவில்லை என சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #பாதிப்பு #வரம் #டிரம்ப்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More