Home இலங்கை சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கும் திட்டம் இல்லை

சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கும் திட்டம் இல்லை

by admin

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அத்தகையதொரு எண்ணம் இல்லை என்ற போதிலும் மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும் என அவா் தொிசவித்துள்ளாா்.

மேலும் சில காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை டஎன அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறைப்பிரிவுகளில் அமுல்ப்படுத்தப்பட்டு்ளள காவல்துறை ஊரடங்கு உத்தரவு தொடரும் எனவும் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவா் தொிவித்துள்ளாா். #சனி #ஞாயிறு #ஊரடங்கு #அஜித்ரோஹண #பிசிஆர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More