Home இலங்கை யாழ் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் முகாங்களாக மாற்றம்

யாழ் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் முகாங்களாக மாற்றம்

by admin

கோப்பாய் இராச வீதியில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதியினை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதனால் விடுதியில் தங்கியிருந்த 375 ஆசிரிய மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரியவர்கள் தனித்தனியான பேருந்துகளில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று (12) காலை சுமார் 8 பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் முனாமாக மாற்றப்படுவதனையடுத்து மாணவர்கள் நேற்றையதினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #வவுனியா #தேசியகல்வியற்கல்லூரி #தனிமைப்படுத்தல்முகாம் #விடுதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More