Home உலகம் 3 கோடி பெண்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்

3 கோடி பெண்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்

by admin

உலகின் பல்வேறு நாடுகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளதென தொிவித்துள்ள ஐ.நா சபை பெற்றோா் பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர் என தொிவித்துள்ளது.

ஐ.நா. சபையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் தொிவிக்கப்பட்டள்ளது.

மேலும் சில நாடுகளில் சட்டங்கள் கூட பெண்களுக்கு எதிராக உள்ளன எனவும் அவர்களுக்கான சொத்துரிமை மறுக்கப்படுவதுடன் சில நாடுகளில் கணவரின் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆண்கள், அதே பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க சில நாடுகளின் சட்டங்கள் அனுமதி அளிக்கின்றன. சில நாடுகளில் மதங்களின் பெயரில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் பறிக்கப்படுகின்றன. பாலியல் துன்புறுத்தல், பால்ய திருமணம், கட்டாய திருமணம், கட்டாய பணி என பல்வேறு வகைகளில் நவீன கால அடிமைகளாக பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

அதாவது 130 பெண்களில் ஒருவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகிறார். உலகம் முழுவதும் சுமார் 3 கோடி பெண்கள் அடிமைகளாக வாழ்கின்றனர். அரபு நாடுகளை சேர்ந்த பெண்கள் கட்டாய திருமணத்தில் சிக்கி அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த நாடுகளில் வீட்டு பணிப்பெண்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாாதஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

உலக மக்கள் தொகையில் பாதிப் பேர் பெண்கள். அவர்களின் சுதந்திரம், உரிமைகளை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த இ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பெண்கள் #அடிமை #பாலினபாகுபாடு #ஐநா #சொத்துரிமை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More