Home இலங்கை கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை

கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை

by admin

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் படகுடன் காணாமல் போயுள்ளாா் என சிலாபம் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் வர்த்தக கட்டடத் தொகுதியில்  தற்காலிகமாக வசித்துவந்த ஒருவருா இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் திகதி சிலாபம்-காவாடியாவத்த பிரதேசத்திலிருந்து,  சிறிய ரக  மீன்பிடிப் படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ள நிலையில் ஆழ்கடல் பகுதியில் படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதனையடுத்து ஒருவா் வேறு படகொன்றில் ஏறி கரையை வந்தடைந்துள்ளார்.

இதன் பின்னர்  கடலில் சிக்கியிருந்த மீனவரை  மீட்பதற்காக படகின் உரிமையாளருடன் அழைத்துக்கொண்டு, மேற்படி மீனவர், நேற்று (20) காலை படகொன்றில் ஆழ்கடல் வரை சென்று  தேடிய போதிலும் மீனவரையும், படகையும் காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளநிலையில் , காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினரின்  ஒத்துழைப்புடன் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #கடலுக்கு #மீனவர் #சிலாபம் #காணவில்லை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More