Home இலங்கை 64 காவல்துறைப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

64 காவல்துறைப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

by admin

இலங்கையிலுள்ள 64 காவல்துறைப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் 15 காவல்துறைப் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 காவல்துறைப் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 காவல்துறைப் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும் வெலிக்கடை காவல்துறைப் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்கள், தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனத் தொிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரமே வர்த்தக நிலையங்களுக்கு செல்வது உசிமானது என காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேவேளை வாடிக்கையாளர்களின் நன்மை கருதி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளை திறக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டதற்கமைய அவையும் திறக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தி கடமைக்கு சமூகமளிக்கு முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், தாம் பணிபுரியும் அலுவலகத்திற்கு செல்வதற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை மட்டுப்படுத்துமாறும் அது தொடா்பில் குறித்த பகுதிக்கான பொதுசுகாதார பரிசோதகருக்கு அறிவித்து, நிகழ்வில் கலந்து கொள்ளும் மிகக்குறைந்தளவான எண்ணிக்கையுடன் நிகழ்வினை நடத்துமாறும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண சடங்கொன்று இடம்பெறுமாயின் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிக்கு செல்வதற்கு, காவல்துறையினாின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் மிக நெருங்கிய உறவினருக்கே இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். #காவல்துறைப்பிரிவு #தனிமைப்படுத்தல் #ஊரடங்கு #குளியாப்பிட்டி #அஜித்ரோஹண

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More