Home இலங்கை வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணம் வருவோர் கிராம அலுவலகரிடம் பதியவேண்டும்

வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணம் வருவோர் கிராம அலுவலகரிடம் பதியவேண்டும்

by admin

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவாட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரவ அதிபர் எம்.பிரதீபன், வடமாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வடமாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளை தளபதி, உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன் போது,

இறுதிச் சடங்கு – 25 பேர் அனுமதி (2 தொடக்கம் 3 நாள்களில் நிறைவுறுத்த வேண்டும்) (வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கலந்தைகொள்ள வருகைதருவது தடை

நடைபாதை வியாபாரம் மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி

தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை

திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை

விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவேண்டும்

மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும்

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிக்களுக்கு அனுமதி

உணவங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை (பொதிக்கு மட்டும் அனுமதி)

வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும்

தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்த வேண்டும்

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும்

முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை, முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்

அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செற்படும்.

அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாள்களும் செயற்படும்

ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி

ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை

பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும். போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  #வெளி மாவட்டங்களிலிருந்து #யாழ்ப்பாணம் #கொவிட்19 #இறுதிச்சடங்கு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More