Home இலங்கை அம்பாறையில் இடி மின்னல் தாக்கி இருவர் பலி

அம்பாறையில் இடி மின்னல் தாக்கி இருவர் பலி

by admin

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கி திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று(30) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பலியானவர்களாவார்.

இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருக்கோவில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அம்பாறை மாவட்டம்   கல்முனை பன்சாலை வீதியில்  உள்ள மதில் இவ்வாறு வெள்ளிக்கிழமை(30) இரவு உடைந்துள்ளது.

இவ்வாறு உடைந்துள்ள மதிலின் சேதங்களினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் கல்முனை கிறின்பீல்ட் தொடர்மாடி குடியிருப்பிலும் இடி மின்னல் காரணமாக தீப்பரவல் ஒன்று ஏற்பட்டதுடன் இதனால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவு பரவியிருந்த தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தது. #இடிமின்னல் #அம்பாறை #கணவன்மனைவி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More