Home இலங்கை தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

by admin

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 


கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது. 
அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர். 

அதேவேளை , தென்மராட்சி, தனங்களப்பு பகுதியில் 20 வயற்காணிகளான சுமார் 6 ஏக்கர் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் 6 ஏக்கர் நெற் செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. 


வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். #பெருக்கெடுப்பு #தென்மராட்சி #கடல்நீரேரி #ஊர்காவற்துறை #நாவாந்துறை #பூநகரி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More