Home இலங்கை கொரோனா தொற்றால் மேலும் இருவா் உயிாிழப்பு

கொரோனா தொற்றால் மேலும் இருவா் உயிாிழப்பு

by admin

இலங்கையில் கொரோனா தொற்றால் இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு பெண்களே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இலங்கையில் கொரோனா உயிாிழப்பு ,23ஆவது உயா்வடைந்துள்ளது.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதான ஒருவரும், கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும் மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 10ஆவது மரணமாக இது பதிவாகியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாணந்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த 27 வயது நபரின் மரணத்தை 22ஆவது கொரோனா மரணமாக கருத முடியாது என சுகாதார அமைச்சு நேற்றயைதினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More