Home இலங்கை மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத் தடை

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத் தடை

by admin

மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது. உடனும் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட இந்தத் தடையானது எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து மக்கள் வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கருத்துரு தொிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். #மேல்மாகாணம் #பயணத்தடை #தனிமைப்படுத்த

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More