Home இலங்கை வீடுகளில் இருந்து தீபாவளியை கொண்டாடுங்கள்

வீடுகளில் இருந்து தீபாவளியை கொண்டாடுங்கள்

by admin

தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தித்து  கொண்டாடுங்கள். இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்கள்.


இன்று மாலை  யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அழைப்பு விட்டுள்ளார்கள்.

உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

அது மட்டுமன்றி இந்துக்களின் விரதநாட்களும் வருகின்றன  எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை , ஒன்றுகூடல்களை தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியாக இறைவனை பிராா்த்திக்க வேண்டும். அமைதியான கொண்டாட்டங்களைக் கூட சமூக இடைவெளி முக்க்கவசம் அணிதல் போன்றவற்றை பேணி தீபாவளியை கொண்டாடுங்கள்.

அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் .

மேலும் சுகாதார துறை மருத்துவதுறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்  எனவும் கோரிக்கை விடுத்தார்கள் இச் சந்திப்பில் நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #தீபாவளி #கொரோனா #மதத்தலைவர்கள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More