Home இலங்கை ஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு

ஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு

by admin

வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 
பருத்தித்துறை ஓடக்கரை ஜே/402 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 100 குடும்பங்கள் மழையினால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 


அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி , உறவினர் வீடுகள்,  பொதுமண்டபங்கள் , பொது இடங்களில் தங்கியுள்ளனர். 


அதேவேளை அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் , மற்றும் அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கினர். அத்துடன் அவர்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து மேலதிக உதவிகளை வழங்குவதாவும் உறுதி அளித்துள்ளனர். #ஓடக்கரை #பாதிப்பு #வடமராட்சி #பருத்தித்துறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More